யார் யாருக்கோ கவி எ Read Count : 152

Category : Poems

Sub Category : N/A

யார் யாருக்கோ கவி எழுதும் நான்
என் தங்கை மகனுக்காக ஒரு கவி இதோ 

எந்த ஒரு மலரும் தந்ததில்லையடா ,
தங்கை மகனே புவியரசு
உன் பூ முகம் தரும்
புன்னகை போல்....

எந்த ஒரு மழையும் 
நினைத்ததில்லை என்னை
உன் எச்சில் கொண்டு கொடுத்த
முத்தம் போல்...

எந்த ஒரு காட்சியும் இப்படி இன்பம் கொடுத்ததில்லையடா 
உன் துயில் சோம்பல்
முறிக்கும் அழகினை போல்....

இதுவரை எனக்கு பிடித்தது 
மண்வாசம் ,
இனிமேல் எனக்கு பிடித்தது 
உன்வாசம் !

இத்தனை நாட்களில் இல்லாத 
எதுவோ என்னை கட்டி இழுக்குதடா ...?

நீ எங்கு சென்றாலும் உன் நினைவுகள் என்னுள் என்றும் நிறைந்திருக்கும்
என் குட்டி தங்கமே
என் தங்கை பெற்றெடுத்த 
முத்தே புவியரசு

நான் நானாய் இருக்கும் நேரங்களில்,
நாணுகிறேன் உன்னைப்போல்,
உன் நினைவுகளால்,
மீண்டும் குழந்தையாய்.....

இப்படிக்கு
நா.சு.கார்த்தி ... ✍️

Comments

  • good

    Sep 10, 2019

Log Out?

Are you sure you want to log out?